அங்காரா: துருக்கியில் நடைபெற்ற கண்டங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி ஆயிரக்கணக்கானோர் கலந்த கொண்டனர். தூக்கியின் இஸ்தான்புல் பகுதியில் கண்டங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி 35-ம் ஆண்டாக நடைபெற்றது. உள்ளூர் மற்றும் சர்வதேச நீச்சல் வீரர்கள் நீச்சல் பந்தயத்தில், விளையாட்டு வீரர்கள் தொடக்கத்துடன் சேர்ந்து 6.5 கிலோமீட்டர் தூரத்தை நீந்துவார்கள். பாஸ்பரஸைக் கடந்து, கண்டங்களை ஆழமாகக் கடந்து, அவர்கள் குருசெஸ்மேயில் முடிவை அடைவார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
இஸ்தான்புல்லின் ஆசிய பக்கத்தில் இருந்து அதன் ஐரோப்பிய பக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் 77 நாடுகளை சேர்ந்த 2600 வீரர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் நீச்சல் அடித்த காட்சி பார்வையாளர்களை வியக்க வைத்தது. போஸ்பரஸ் ஜலசந்தியில் 6.5கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் பெண்கள் பிரிவில் முர்கதாஸ் நரின் மற்றும் ஆண்கள் பிரிவில் துகாக்கன் உலாக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் முறையே 45 நிமிடத்தில் இலக்கை கடந்தனர்.