சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி வழிகாட்டு விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தகவல் தெரிவித்துள்ளார். வழிகாட்டு விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.