Friday, July 18, 2025
Home செய்திகள்உலகம் இஸ்ரேல் உடனான போரில் உயிர்நீத்த ஈரான் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச்சடங்கு: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி

இஸ்ரேல் உடனான போரில் உயிர்நீத்த ஈரான் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச்சடங்கு: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி

by Ranjith

துபாய்: இஸ்ரேல் உடனான போரின்போது உயிர்நீத்த ஈரானின் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் இறுதிச்சடங்கு தெஹ்ரானில் நேற்று நடைபெற்றது. ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு மறுத்து வந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. கடந்த 13ம் தேதி ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன.

மேலும் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை திட்டத் தலைவர் தலைவர் ஹூசைன் சலாமி மற்றும் ராணுவ ஜெனரல் அமிர் அலி ஹாஜிசாதே ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளும் தீவிரமாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை நடத்தி வந்தன. சுமார் 12 நாட்கள் இந்த போர் நீடித்து வந்தது. பின்னர் கடந் த24ம் தேி இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர டிரம்ப் அறிவித்தார். இந்த போரின்போது ஈரான் ராணுவத்தை சேர்ந்த சுமார் 30 தளபதிகள், 11அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

போரில் உயிர்நீத்த ஈரான் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதனையொட்டி உயிர்நீத்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பெட்டிகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட மொத்தம் 60 பேருக்கு நேற்று இறுதிச்சடங்கு நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு இருந்தனர். போரில் உயிர்நீத்தவர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். ஈரானில் கடந்த காலங்களில் இதுபோன்று முக்கிய தளபதிகள் மற்றும் தலைவர்களின் இறுதிச் சடங்குகளின்போது ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி காமேனி தலைமைதாங்குவார் மற்றும் பிரார்த்தனைகளை செய்வார். ஆனால் நேற்று நடந்த இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்கவில்லை. கடைசியாக ஜூன் 11ம் தேதி அவர் பொதுவெளியில் தோன்றினார். அதன் பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi