டெல்லி: ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸேஷ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் தொடர்பான தற்போதைய நிலை பற்றி விவாதித்தார். சமீபத்திய தாக்குதல்கள் தொடர்பாக தனது கவலையை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி பதிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். போர் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கவும் அமைதிக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
+
Advertisement



