துபாய்: ஈரானில் மத நிந்தனை செய்ததாக சிறையில் இருந்த 2 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரானில் யூசூப் மெக்ராட் மற்றும் சட்ரோல்லா பசிலி ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு டெலிகிராம் செயலியில் மத நிந்தனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இருவருக்கும் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.