சென்னை: சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி ‘‘உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனி செம்மொழி’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி’’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச தாய்மொழி தினம் ‘உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனி செம்மொழி’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
0