சென்னை: உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கூடுதல் டிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். எர்ணாகுளம் அருகே களமசேரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள், மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆணையிட்டுள்ளது.