புதுடெல்லி: 6 நிறுவனங்களின் ரூ. 6.47 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி சிலர் விளம்பரம் செய்துள்ளனர். அதன்படி செயலியை அறிமுகப்படுத்தி அதன் பெயரில் பணம் வசூல் செய்துள்ளனர்.
இதன் மூலம் வசூலான தொகையை 6 நிறுவனங்கள் மற்றும் 9 தனிநபர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணம் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தரகர்களுக்கு அனுப்பப்பட்டு கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வந்த புகாரையடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து, 6 நிறுவனங்களின் ரூ.6.47 கோடி முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.