டெல்லி : இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை. இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே.இரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி
0