Sunday, September 24, 2023
Home » இந்திய கால்பந்தின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுக்கும் சிவகங்கை வீரர் : ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஜொலித்த சிவசக்தி

இந்திய கால்பந்தின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுக்கும் சிவகங்கை வீரர் : ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஜொலித்த சிவசக்தி

by Lavanya

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தில் பிறந்த சிவசக்தி நாராயணன் இந்திய கால்பந்து அணியின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அடுத்தமாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிகளுக்கான இந்திய கால்பந்து அணியில் தமிழகத்தை சேர்ந்த சிவசக்தி நாராயணன் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்தமுறை இந்திய அணிக்கு தேர்வானபோது காயத்தால் களமிறங்கும் வாய்ப்பை இழந்த சிவசக்தி நாராயணன் தற்போது கிடைக்க உள்ள வாய்ப்பில் முத்திரை பதிக்க காத்திருக்கிறார்.

சிவகங்கையிலுள்ள குக்கிராமமான கண்டனூரில் பிறந்த சிவசக்தி நாராயணனுக்கு சிறுவயதிலிருந்தே கால்பந்து மீது அதிக ஆர்வம் உண்டு. 8ம் வகுப்பு படிக்கும் போது அவரது தந்தை காலமான நிலையில் தாய் அளித்த தொடர் ஊக்கத்தில் கால்பந்தில் தனது ஈடுபாட்டை அதிகப்படுத்தியுள்ளார். சிதம்பரத்தில் பள்ளி படிப்பை முடித்த சிவசக்திக்கு முன்னாள் கால்பந்து வீரரின் ராமன் விஜயன் கிளப்பில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முன்கள வீரரான சிவசக்தி இளம்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் களத்தில் மூத்த வீரர்களுக்கு சவால் அளித்துள்ளார்.

சிவசக்தியின் திரன் மேலும் மேலும் மேம்பட அவருக்கு ஐ.எஸ்.எல் கால்பந்தில் பெங்களூரு ஏஃப் சி அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 2022ல் நடைபெற்ற தூரந்த் கோப்பையில் களமிறங்கும் வாய்ப்பை சிவசக்தி நாராயணன் பெற்றார். 6 போட்டிகளில் 5 கோல் அடித்த சிவசக்தி பெங்களூரு ஏஃப் சி சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். ஐ.எஸ்.எல் தொடரிலும் கலக்கிய சிவசக்தி 17 போட்டிகளில் 6 கோல் அடித்ததுடன் 2 கோல் அடிக்கவும் உதவினார்.

இதன் பலனாக 2022-2023 ஐ.எஸ்.எல் சீசனில் வளர்ந்து வரும் வீரருக்கான விருது அவருக்கு கிடைத்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்திய ஜாம்பவானான சுனில் செத்த்ரிக்கு முன்னதாகவே சிவசக்தி களமிறக்கப்பட்டார். சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிகளுக்கான இந்திய கால்பந்து அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கால்பந்து ஜாம்பவான்கள் வரிசையில் சிவசக்தியின் பெயர் இடம்பெறும் எனவும் உலக அரங்கில் இந்தியாவிற்காக சிவசக்தி வெற்றிகளை குவிப்பார் எனவும் நண்பர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?