சென்னை: மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்று வருவதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது: கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் துவளாமல் மீண்டுள்ளது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் பயிற்சியை தொடங்குவதை கண்டு, நமது நெஞ்சங்கள் பெருமிதத்தால் பொங்குகின்றன.
மணிப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் பயிற்சி பெற வந்துள்ள 15 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் இப்போது எங்கள் விளையாட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர். இது எல்லைகளுக்கு அப்பால் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. நாம் ஒன்றிணைந்து, இந்தியாவின் ஒற்றுமை உணர்வைத் தழுவிக்கொள்வோம்.