Monday, May 29, 2023
Home » ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை இந்தியா வழங்குகிறது

ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை இந்தியா வழங்குகிறது

by Mahaprabhu

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான், உணவு நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நாட்டு மக்களுக்கு உணவு உதவிக்காக 10,000 டன் கோதுமை வழங்க ஐநா உலக உணவு திட்டத்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கடந்தாண்டு, இந்தியா 40,000 டன் கோதுமை வழங்கியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் 23 மில்லியன் உணவு பாதுகாப்பற்ற மக்களுக்கு ஐநா உலக உணவு திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்தது. இந்நிலையில் தற்போது 5வது தவணையாக 10 ஆயிரம் டன் கோதுமை சபஹர் துறைமுகம் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மும்பையில் பாக்-ஆப்கான்-ஈரான் பிரிவின் வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் ஜேபி சிங் மற்றும் இந்தியாவின் உலக உணவு திட்டத்தின் இயக்குனரும் பிரதிநிதியுமான எலிசபெத் ஃபாரே ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

பின்னர் எலிசபெத் ஃபாரே கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு உதவி செய்ததற்காக இந்திய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றி. இந்தியாவின் ஆதரவு, தேவை உள்ள குடும்பங்களுக்கு உயிர்நாடியாக உள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதும் மில்லியன்கணக்கான மக்களுக்கு ஐநா உலக உணவு திட்டத்தின் உதவியின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது’ என்றார். மேலும் ஜே.பி சிங் கூறும்போது, ‘5வது தவணையானது ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் ஐநா உலக உணவு திட்டத்தின் மூலம் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்ட உதவியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா அதன் உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது” என்று கூறினார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi