புதுடெல்லி: இந்திய விண்வௌி வீரர் சுபன் ஷூ சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வௌி மையத்துக்கு செல்ல உள்ளார். ஆக்சியம் ஸ்பேஸ் நாசாவுடன் இணைந்து ஏப்ரல் – ஜூன் இடையே ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் என்ற விண்கலத்தை சர்வதேச விண்வௌி மையத்துக்கு ஏவ உள்ளது. இந்த ஆக்ஸ்-4 விண்வௌி பயணத்தில் இந்தியாவை சேர்ந்த சுபன் ஷூ சுக்லா பயணிக்க உள்ளார்.
மேலும் அவருடன் போலந்து மற்றும் ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் பயணிக்க உள்ளனர். இவர்கள் 14 நாள்கள் விண்வௌியில் தங்கி இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த சுபன் ஷூ சுக்லா இந்திய விமான படையில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.