சென்னை: இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பேசியுள்ளார். சென்னை அடுத்த ஒரகடத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழாவில் டாடா குழும தலைவர் பேசியுள்ளார். தொழில்நுட்பம் வளர்ந்து, வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால் மாணவர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.