சென்னை: இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது. மீனவர்கள் கைதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியா – இலங்கை கூட்டுக் குழு கூட்டம்: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்
90