டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,89,744லிருந்து 4,49,90,054ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு மேலும் 2பேர் பலியான நிலையில் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,864லிருந்து 5,31,888ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 571 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,709ஆக குறைந்தது.