Monday, May 12, 2025

இளநீர்… இளநீர்…

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர்தான் சுத்தமானதும், சத்து நிறைந்த தாகும். இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் சியும் பி காம்ப்ளெக்ஸும் உள்ளன.

*கோடையில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும்.

*வழுக்கை இல்லாத இளநீரை பகல் உணவுக்குப் பிறகு குடித்தால் உணவு எளிதில் ஜீரணமாகி, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*இளநீர் கொண்டு அம்மை தழும்புகளை கழுவினால் வடு மறையும்.

*தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

*இளநீரில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு பலன் தரும்.

*பேதி, மயக்கம், அசதி ஏற்படும் போது இரண்டு டம்ளர் இளநீர் சாப்பிடலாம்.

*உடம்பெல்லாம் அனல் போல் தகித்தால் இளநீர் ஒரு நாளைக்கு மூன்று முறை பருகினால் தேக சூடு குறையும்.

*உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை சரி செய்யும்.

*கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான நீர்சத்து வெளியேறும். அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான தீர்வு.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.

*சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi