Thursday, March 28, 2024
Home » மனைவிகளை பங்கு போட்ட சம்பவம் புகார் கொடுத்த மனைவியை கொன்ற கணவனும் சாவு

மனைவிகளை பங்கு போட்ட சம்பவம் புகார் கொடுத்த மனைவியை கொன்ற கணவனும் சாவு

by Ranjith

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டெலகிராம், மெசஞ்சர் உள்பட சமூக வலைத்தளங்கள் மூலம் உல்லாசத்திற்காக மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோட்டயம் அருகே உள்ள மணர்க்காடு பகுதியைச் சேர்ந்த ஜூபி (28) என்ற இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜூபியின் கணவர் ஷினோ மேத்யூ உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஜூபி தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் கடந்த 19ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ஜூபி வெட்டிக் கொலை செய்யப்பட்டது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜூபியை அவரது கணவன் ஷினோ மேத்யூ கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஷினோ மேத்யூ தன்னுடைய வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. போலீசார் அவரை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை ஷினோ மேத்யூ இறந்தார்.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi