Saturday, December 9, 2023
Home » கணவர் மீது புகார் கொடுக்க சென்ற சிறுமியை மிரட்டி எஸ்எஸ்ஐ பலாத்காரம்: போக்சோவில் கைது; சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடி

கணவர் மீது புகார் கொடுக்க சென்ற சிறுமியை மிரட்டி எஸ்எஸ்ஐ பலாத்காரம்: போக்சோவில் கைது; சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடி

by Karthik Yash

பென்னாகரம்: போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்த 15 வயது சிறுமியை மிரட்டி வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்த எஸ்எஸ்ஐ, போக்சோவில் கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் ெசய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது பெற்றோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசித்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு, சிறுமிக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது தொழிலாளிக்கும், இருவீட்டார் சம்மதத்துடன், நெருப்பூர் அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது.

தற்போது, இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தையை சிறுமி சரிவர கவனிக்காததால், அவரது மாமனார், மாமியார் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால், சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கணவன் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்துவதாக, ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், ஏரியூர் சிறப்பு எஸ்ஐ சகாதேவன்(55) விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது, சிறுமியின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட எஸ்எஸ்ஐ சகாதேவன், அவரிடம் அடிக்கடி பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பின்னர், அந்த சிறுமியுடன் நெருங்கி பழகிய அவர், மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் செல்போனில் இருந்த கால் ரெக்கார்டு மூலம், எஸ்எஸ்ஐயுடன் அவருக்கு இருந்த தகாத உறவு, அவரது கணவருக்கு தெரியவந்தது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் உன் மனைவியை விசாரணை என்ற பெயரில் எஸ்எஸ்ஐ பைக்கில் அழைத்துச்செல்கிறார் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மனைவியை கண்டித்து அடித்துள்ளார். இதனால், அந்த சிறுமி சைல்டு லைன் அமைப்பை தொடர்பு கொண்டு, தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு காப்பக அதிகாரிகள் சிறுமியிடம் விசாரித்த போது, ஏரியூர் போலீஸ் எஸ்எஸ்ஐ சகாதேவன், தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இதுதொடர்பாக, பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். அங்கு நீதிபதி முன்னிலையில் சிறுமி வாக்குமூலம் அளித்தார். அதன் பேரில், எஸ்எஸ்ஐ சகாதேவன் மீது, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த எஸ்எஸ்ஐ சகாதேவன், தலைமறைவாகி விட்டார். இதனிடையே, நேற்று முன்தினம், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ சகாதேவன் சரணடைந்தார். இதையடுத்து, போலீசாaர் அவரை கைது செய்து, பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சகாதேவனை சஸ்பெண்ட் செய்து, தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். புகார் கொடுக்க வந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம், தர்மபுரி மாவட்ட போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?