தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 14,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6.498 கனஅடியில் இருந்து 7,563 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக அதிகரிப்பு: நீர் இருப்பு 21.003 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.