தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியில் இருந்து 43,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி வினாடிக்கு 43,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக அதிகரிப்பு
0