Saturday, January 25, 2025
Home » இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!

இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

‘ஆப்பிள்’ பழம் உடலை பாதுகாக்கிற, நலமளிக்கிற உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷ தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

*ஆப்பிளில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்களும், குறைந்த அளவு ேசாடியமும் உண்டு. அதனால் இதய இயக்க கோளாறுகளுக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து உண்பது சிறந்த பலனைத் தரும்.

*மூளைக் கோளாறை குணப்படுத்தும் பாஸ்பரஸ் ஆப்பிளில் உள்ளது. அதனால் மூளைக் கோளாறு உள்ளவர்கள் அவசியம் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. நோயும் குணமாகும்.

*தூக்கத்தில் நடமாடும் வியாதி உள்ளவர்கள் தினமும் இரண்டு ஆப்பிள்களை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து, பால் கலந்து கொடுத்து வந்தால் வியாதி விரைவில் குணமாகி விடும்.

*சிலர் ஆப்பிள் தோலை சீவி எறிந்து விட்டுப் பழத்தை மட்டும் உண்பர். சதைப் பகுதியை விட தோலிலும், அதனடியில் உள்ள சதுப்பிலும் அதிக அளவு வைட்டமின் ‘சி’ சத்து இருக்கிறது.
*ஆப்பிளை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. வேகவைத்த ஆப்பிள் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

*அனைத்து வகை தலைவலிகளுக்கும் ஆப்பிள் அருமருந்தாகும். தலைவலியால் அவதிப்படுபவர்கள் ஆப்பிளின் தோலையும், கடினப்பகுதியையும் அகற்றி விட்டு, சதைப் பகுதியுடன், சிறிதளவு உப்பு சேர்த்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஒரு வாரத்தில் தலைவலி நோய் தீரும்.

*ஆப்பிள் சாப்பிடுவதால், ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படும். ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்து பொதுவாக செரிமானத்திற்கு மிக சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் ஆப்பிளை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது.

*ஆப்பிளில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், ரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடக்கூடாது.

*சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். ஆப்பிள் உட்கொண்டவுடன் தோலில் அரிப்பு, சொறி, வீக்கம் ஆகியவை தோன்றும். ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்பட்டால், உடனடியாக ஆப்பிள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

தொகுப்பு: எஸ்.ஜெயந்திபாய், மதுரை.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi