Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்த வழக்கில் திங்கட்கிழமை விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்த வழக்கில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும். கே.பி. அன்பழகன், கே.சி.வீரமணி, இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. எல்இடி விளக்கு கொள்முதல் முறைகேடு, சொத்துக்குவிப்பு தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்துள்ளனர்.