Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நீரிழப்பைத் தடுக்க...தவிர்க்க!

நன்றி குங்குமம் டாக்டர்

கொளுத்தும் வெயிலில் நீரிழப்பு என்பது முக்கியப் பிரச்சனை. இந்தியா போன்ற மிதவெப்ப மண்டல நாடுகளில் செப்டம்பர் இறுதிவரைகூட வெயிலின் தாக்கம் குறைவதில்லை. அதிலும் சமீபமாய் பருவ மழை பொய்த்து வறண்ட வானிலையே நிலவுகிறது. கடந்த ஜூலையை உலகிலேயே வெப்பமான ஜூலை என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். வெயிலின் கடுமையிலிருந்தும் நீர் இழப்பிலிருந்தும் எப்படித் தப்பிப்பது என்று பார்ப்போம்.

வியர்வை மூலம் கணிசமான நீர் இழப்பு காரணமாக, அதிக வெப்பநிலை மக்களை அசௌகரியமாகவும் சோர்வாகவும் உணர வைக்கிறது. வெப்பம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க, உடல் நீரை தக்க வைத்திருப்பது அவசியமாகிறது.

நீங்கள் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் போதுமான திரவங்களை உள் எடுப்பது முக்கியம். உங்கள் உடல் 1 முதல் 2 சதவிகிதம் தண்ணீரை இழந்தாலும் நீரிழப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு உறுப்பு செயலிழப்பு முதல் சோர்வு, தலைவலி மற்றும் தசை பலவீனம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, சரியாக அளவில் உடல் நீரை பராமரிப்பது முக்கியம். இதை பற்றி ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மருத்துவ உணவியல் நிபுணர் திரு. பிச்சையா காசிநாதன் பின்வரும் ஆலோசனைகளை வழங்குகிறார்.

நீரிழப்பைத் தவிர்க்க சூடான நாட்களில் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். கூடுதலாக, இது உடல் சூட்டைக் குறைப்பதற்கும் இயற்கையான குளிர்ச்சியை அதிகரிப்பதற்கும் உதவும். முறையான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் மனித உடலில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை குறைக்கலாம். சாமை, தினை, வரகு, கம்பு போன்ற தினைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.

1. ஒவ்வொரு உணவு மற்றும் சிற்றுண்டியுடன் தண்ணீர் குடிக்கவும்:

உட்கொள்ளும் ஒவ்வொரு கலோரிக்கும் 1 மில்லி லிட்டர் திரவத்தை குடிக்க வேண்டும் என்பதை ஒரு எளிய விதியாக செய்வோம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும், ஆனால் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உடல் வேலை அதிகமாக செய்பவராக மூன்று லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

2. தாகம் எடுப்பதற்கு முன் தண்ணீர் குடியுங்கள்:

உங்களுக்கு தாகம் எடுக்கத் தொடங்கும் போது உங்கள் உடல் ஏற்கனவே நீரை இழந்திருக்கும். நீங்கள் போதுமான அளவு நீர் குடிக்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க, உங்கள் சிறுநீரின் நிறத்தைப் பாருங்கள். சிறுநீர் கழிக்கும் போது வைக்கோல் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். நீங்கள் அடர் மஞ்சள் நிறத்தைக் கண்டால், உங்கள் திரவ உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

3.காஃபின் நிறைந்த பானங்களை உட்கொண்டால், அதை காஃபின் நீக்கப்பட்ட பானங்களுடன் சமநிலைப்படுத்துங்கள்:

ஆல்கஹால் மற்றும் காஃபின் கொண்ட பானங்கள் இரண்டும் டையூரிசிஸை ஏற்படுத்துகின்றன. உடலில் நீரேற்றம் செய்வதற்கு பதிலாக, டையூரிடிக்ஸ் உடலில் அதிக நீரை வெளியேற்றும். எனவே அதற்கு தேவையான நீரை ஈடு செய்ய வேண்டும்.

4.பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

பழச்சாறு சத்துகள் நிறைந்தது. பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் சில நபர்களுக்கு அதிக கெட்டியாகவோ அல்லது இனிப்பாகவோ உணரலாம். அதில் இருக்கும் கூடுதல் கலோரிகளை சில நபர்கள் விரும்புவதில்லை. அதனால் சோடா அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

5.தண்ணீரை அருந்துங்கள்:

உங்கள் திரவத் தேவைகளில் பெரும்பாலானவை நீங்கள் உட்கொள்ளும் தண்ணீர் மற்றும் பிற பானங்களால் பூர்த்தி அடைகின்றன. நீங்கள் உண்ணும் உணவின் மூலமும் திரவங்களைப் பெறலாம். உதாரணமாக, ப்ரோக்கோலி, சுரைக்காய், வெள்ளரி, தக்காளி அல்லது முலாம்பழம், சூப்கள் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் திரவ நுகர்வை அதிகரிக்க உதவும்.

6.தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்:

வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கும் போது அல்லது வேலைகளைச் செய்யும்போது, குறிப்பாக வெப்பமான மாதங்களில், உங்கள் உடல் நீரின் அளவை தக்க வைக்க அல்லது அதிகரிக்க இது ஒரு அருமையான யோசனையாகும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களைத் தேர்ந்தெடுக்கவும், மேலும் அவற்றில் பிபிஏ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7.சிட்ரஸ் பழத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்:

நீங்கள் வெறும் தண்ணீரை குடிப்பதை சிரமமாக உணர்ந்தால் அதில் ஒரு துண்டு எலுமிச்சை மற்றும் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளவும். அதன் சுவையில் நீங்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க விரும்பலாம்.

8.பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களை விட தண்ணீரைத் தேர்ந்தெடுங்கள்:

பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, விளையாட்டு உற்சாக குளிர்பானங்கள் உள்ளிட்ட செயற்கை இனிப்பு நிறைந்த பானங்களை விட தண்ணீர் ஆரோக்கியமான தேர்வாகும். இது உங்கள் உடல் நீரை மேம்படுத்தும் மேலும் பணத்தையும் கலோரிகளையும் சேமிக்க உதவும்.

9.‘நீர் உட்கொள்ளல்’ குறிப்பை பராமரிக்கவும்:

உங்கள் கடந்தகால செயலை ஆராய்வது உங்கள் திரவத் தேவைகளைப் பராமரிக்க உங்களை ஊக்குவிக்கும். கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் திரவங்களைக் கண்காணிப்பதற்கான பல பயன்பாடுகளில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கவும்.

10.தினமும் ஒரு முறை பழைய சோறு (நீராகாரம்) உட்கொள்ளவும்:

அரிசி அல்லது தினைகளை ஒரு இரவு முழுவதும் புளிக்கவைக்கும் போது, அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் உள்ளடக்கம் கணிசமாக உயரும். இது மிகச்சிறந்த புரோபயாடிக் உணவாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அரிசியின் ஊட்டச்சத்துக்கு எதிரான கூறுகள் லாக்டிக் அமில பாக்டீரியாவால் உடைக்கப்பட்டு, நுண்ணூட்டச்சத்து மற்றும் தாது உயிர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. காலை உணவாக இதை சாப்பிடுவது சிறந்தது என்று கருதப்படுகிறது, ஏனெனில் ஊட்டச்சத்து நம் உடலில் உறிஞ்சப்பட்டு, நாள் தொடங்குவதற்கான ஆற்றலை அதிகரிக்கும். அதனுடன் தண்ணீர் மற்றும் சிறிதளவு தயிர் அல்லது மோர் சேர்த்து சாப்பிட்டால் உடல் மிகவும் குளிர்ச்சியடையும்.