மதுரை: உயர்நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் நிறைவேற்றாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் பயிற்சி மையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஞானப்பிரகாசம் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என்று ஞானப்பிரகாசம் வழக்கு தொடர்ந்தார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி பயிற்சி மைய இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.