கேரளா மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் ரூ.48 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல், துணிப் பையில் தனி அறை அமைத்து கடத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதாபிசாபு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணம் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை. பாலக்காடு ரயில் நிலையம் வந்த ரயில் பயணியிடம் சோதனையிட்ட போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.