சென்னை: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: கலைஞருக்கும் பேராசிரியருக்கும் அன்பு இளவல்! செவித்திறன் பாதிக்கப்படும் அளவுக்கு நெருக்கடி நிலைக்கால சிறைக்கொடுமையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட தீரர்! என் மீது அளவற்ற அன்புகொண்ட அண்ணன்! அகவை 86 காணும் ஆர்க்காட்டார் நூறாண்டு தாண்டி வாழ்க!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.