பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2 மாதங்களில் 56 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய், 105 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி, கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், அதிகாரிகள் சரவணன், கலைவாணன், ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 56 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய், 105 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.