Monday, June 16, 2025
Home செய்திகள் அரசு பேருந்துகளில் சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ரூ.10,000 பரிசு

அரசு பேருந்துகளில் சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ரூ.10,000 பரிசு

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொலை தூர பேருந்துகளில் பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் வலைத்தளமான https://www/tnstc.in, TNSTC செயலி மூலம் பயணம் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது. வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதத்திலும் சாதாரண நாட்களில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யும் பயணிகளில் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3 பயணிகளுக்கும் தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இத்திட்டத்தில் ஜூன் மாதம் முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவுசெய்து, முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000, இதர 10 பயணிகளுக்கு தலா ரூ.2000 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜூன் மாதத்திற்கான 13 வெற்றியாளர்களை கணினி குலுக்கல் முறையில் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 13 பயணிகளுக்கும் விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi