Saturday, December 2, 2023
Home » அரசு வழக்கறிஞர்களின் கட்டணம் இரு மடங்கு உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்

அரசு வழக்கறிஞர்களின் கட்டணம் இரு மடங்கு உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்

by Ranjith

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.எஸ்.சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன், ராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திட அரசு வழக்றிஞர்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள், அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர். இந்நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 1995ம் ஆண்டிற்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது.

கலைஞர் 2006ம் ஆண்டு பதவியேற்றதும், அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைத்திட 2007ம் ஆண்டு ஒரு குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011ம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011ம் ஆண்டிற்குப் பின், 10 ஆண்டு காலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர்களின் பங்களிப்பு மற்றும் பணி சுமையினை கருத்திற் கொண்டு இவர்களது கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவசியம் எனக் கருதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் உயர் நீதிமன்றம் தவிர்த்த அனைத்து நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் அனைத்து அரசு வழக்கறிஞர்களும் பயன் பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் பங்கேற்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?