சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி பெண் தையலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 100 பள்ளிகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டது. திட்டம் வெற்றி பெற்றால் 37 லட்சம் மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி பெண் தையலர்களுக்கு கிடைக்கும். பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தயாரிக்கும் பணி பெண் தையலர்களிடம் ஒப்படைப்பு
250