சென்னை: ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை போலீஸ் ஆஜர்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து சுருக்கா வினோத்திடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.