சென்னை: திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. பாசனத்திற்கு 20.09.2023 முதல் 31.12.2023 முடிய, ஒரு நிரப்பிற்கு, நீரிழப்பு உட்பட. மொத்தம் 250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.