சென்னை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்வு; 6-8ஆம் வகுப்பு வரை ரூ.3000ல் இருந்து 6000 ஆக உயர்வு; 9-12ஆம் வகுப்பு வரை ரூ.4,000ல் இருந்து ரூ.8000 ஆக உயர்வு; இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு; முதுநிலை பட்டம், தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.7,000ல் இருந்து 14,000 ஆகவும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.