சென்னை: அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாளில் பதில் தராவிட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என அரசாணையை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாளில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொதுநல மனுக்கள் அதிகரித்துள்ளது. அரசு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க கோரிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முறையீடு செய்யப்பட்டது. வழக்கு பற்றி அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உறுதி அளித்தார்.
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாளில் பதில் தராவிட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: அரசாணையை சுட்டிக்காட்டி ஐகோர்ட் எச்சரிக்கை
0