கொட்டை நீக்கிய நெல்லிக்காய் – 1/2 கப்,
தக்காளி – 1(அரிந்தது),
இஞ்சி துருவல் – 1,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்.
செய்முறை:
நெல்லிக்காய், தக்காளி, இஞ்சி துருவல், உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிளகு, சீரகத்தூள், கொத்தமல்லி சேர்த்து இளம் சூடாக பருகவும். இதனை சாதத்திலும் கரைத்து குடிக்கலாம். நல்ல புத்துணர்ச்சி தரும்.