Thursday, April 18, 2024
Home » தங்கக்கட்டிகள் படகில் கடத்தல்?

தங்கக்கட்டிகள் படகில் கடத்தல்?

by Karthik Yash
Published: Last Updated on

மண்டபம்: இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் படகில் கடத்தி வரப்படுவதாக மத்திய பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தென்கடல் எனப்படும் மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல் படை, மத்திய வருவாய் புலனாய்வு அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு, ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென்கடல் கரையை நோக்கி வந்தது. படகை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். படகில் இருந்து தப்பிக்க முயன்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் வேதாளையைச் சேர்ந்த முஹமது நாசர், அப்துல் கனி, பாம்பனை சேர்ந்த ரவி என தெரிந்தது. அவர்கள் படகில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்தனரா, பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க தங்கக் கட்டிகளை நடுக்கடலில் வீசி விட்டு வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

You may also like

Leave a Comment

13 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi