இராமநாதபுரம்: ரூ. 72.5கோடி தங்கம் கைப்பற்றபட்ட விவகாரத்தில் கடலுக்கு அடியில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தப்பி ஓடியவர்கள் கடலில் ஏதேனும் தங்கத்தை விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டையில் தூத்துக்குடி முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.