சென்னை: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்திருந்தது.