Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ கைது; உடனடியாக சஸ்பெண்ட்

திருப்பரங்குன்றம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு எஸ்ஐ கைதானார். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து மதுரை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றியவர் ஜெயபாண்டி. இவர், கடந்த டிச.13ம் தேதி கார்த்திகை திருவிழா பாதுகாப்பு பணிக்காக திருப்பரங்குன்றத்திற்கு சென்றார். அப்போது திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார், திடீர் நகர் சிறப்பு எஸ்ஐ ஜெயபாண்டி மீது, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சிறப்பு எஸ்ஐ மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் நேற்று அவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

கைதான ஜெயபாண்டி, மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது திருநங்கை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, புகாருக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் பாலியல் வழக்கில் சிறப்பு எஸ்ஐ ஜெயபாண்டி கைதானதால், அவரை சஸ்பெண்ட் செய்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.