Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சென்னை ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

கலசபாக்கம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெரியநொளம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் பால்தினகரன்(41). இவர் சென்னையில் 108 ஆம்புலன்சில் டிரைாவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பமாக உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இதனால் பால்தினகரன் மனைவியை பார்க்க அடிக்கடி மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 4ம் தேதி பால்தினகரன் தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்தாராம். அந்த சிறுமியிடம் பால்தினகரன் நைசாக பேசியுள்ளார். பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் ெதாந்தரவு கொடுத்துள்ளார்.

இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 7ம் தேதி சிறுமியை, அவரது தாயார் குளிக்க வைத்துள்ளார். அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, பால்தினகரன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், போளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து பால்தினகரனை கைது செய்தனர்.