ஊட்டி: ஊட்டி கர்நாடக பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஜெரோனியம் மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கோடை சீசன் துவங்க சில நாட்களே உள்ள நிலையில் தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபால், கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இப்பூங்காவில், தொட்டிகளில் ஜெரோனியம், பால்சம், டெய்சி உட்பட பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு, தற்போது, அதில் மலர்கள் பூத்து காணப்படுகிறது. இந்த தொட்டிகள் பசுமை குடிலில் மாடங்களில் மற்றும் தரையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


