கரூர்:
குளித்தலை அருகே குப்பையில் கிடந்த பட்டாசுகளை எடுத்து வெடித்தபோது 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். கவுண்டம்பட்டியில் வெடிக்காத பட்டாசுகளை கல்லால் குத்தியபோது வெடித்து விபத்து நேரிட்டது. காயமடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.