Thursday, May 15, 2025

பழம் தரும் பலம்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

உணவே மருந்து, மருந்தே உணவு என்கின்ற பழமொழிக்கேற்ப நமது உடலை உணவு வகைகளால் முறையாக உண்டு வந்தால் 75% நோய் நம்மை நெருங்காது. இதில் பழ வகைகளும், கீரை வகைகளும் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, இயற்கையாகவே கிடைக்கும்.வாழைப்பழம்: கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்தது. எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலைப் போக்கும். பேயன் வாழை குடல் கிருமிகளை அகற்றிடவும், நேந்திர வாழைகள் உடலில் உள்ள கோளாறுகளை நீக்கும். ரஸ்தாளி ஊட்டச்சத்து கொடுக்கும்.

மா : மாம்பழத்தினை தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. இதில் இரும்புச்சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து இருக்கின்றன.

பப்பாளி: பால் சேர்த்து சாப்பிடலாம். இதிலும் அதிகமான சத்துக்கள் இருப்பதால் எல்லோருமே சாப்பிடலாம். குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள்.

மாதுளை: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். குடல் கிருமிகளை வெளியேற்றவும், இதயத்திற்கு உறுதியையும் கொடுக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும்.

அன்னாசி: இரைப்பை ரத்தத்தை சுத்தம் செய்யும். ரத்த விருத்தி ஏற்படுத்தும்.

திராட்சை: ரத்த விருத்திக்கும், அறிவு வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

ஆப்பிள்: உண்ட உணவை செரிக்க செய்யவும், உணவுப் பாதையை சுத்தம் செய்யவும் கூடியது.

கொய்யா: வைட்டமின் ‘சி’, கால்சியம், புரதச் சத்து உள்ளது. மலச்சிக்கலை போக்கும்.

சப்போட்டா: குளுக்கோடின் சக்தி நிறைந்தது. வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போகும்.

ஆரஞ்சு: உடல் சத்துக் குறைவு உள்ளவர்கள் இதன் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

பேரிக்காய்: சிறுநீரக அடைப்பு, சிறுநீரகக் கற்களை அகற்றும்.

சீத்தாப்பழம்: சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

எலுமிச்சை: இதில் சிட்ரிக் அமிலமும், கந்தகமும், மெக்னீசியமும் இருக்கின்றது. ரத்த சுத்திக்கும், வாய் துர்நாற்றத்தைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும்.

முலாம் பழம்: குடலிலுள்ள கொடிய விஷங்களை போக்கும்.

தர்பூசணி, வெள்ளரி: உடலுக்குத் ேதவையான நீர் சத்தினை கொடுக்கும்.

தொகுப்பு: எல்.நஞ்சன், நீலகிரி.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi