Wednesday, April 24, 2024
Home » திருத்தணி சட்டமன்ற அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம்: அமைச்சர், எம்பி திறந்து வைத்தனர்

திருத்தணி சட்டமன்ற அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம்: அமைச்சர், எம்பி திறந்து வைத்தனர்

by Ranjith


திருத்தணி: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி, ம.பொ.சி. சாலையில் உள்ள திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலவச இ-சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில்,  டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, அமைச்சர் சா‌.மு.நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியின் போது எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரிஷப், திருத்தணி தாசில்தார் விஜயராணி, மாநில நிர்வாகிகள் ஆதிசேஷன், நாகலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன், மிதுன் சக்கரவர்த்தி, நகர செயலாளர் வினோத்குமார் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ஆர்த்தி ரவி, கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அகூர்மாணிக்கம், கணேசன், ஜோதி நகர் ஆறுமுகம், முஸ்தபா, சுரேஷ், இளைஞர் அணி கிரண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

2 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi