சென்னை: 2018ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்திகோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் கலந்துகொண்டு போராடியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, திமுக எம்எல்ஏ கார்த்திக் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், இந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்த நிலையில், குறிப்பிட்ட மூவர் மீதான பதிவான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.