பெங்களூரு: இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 84. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கஸ்தூரிரங்கன் குடும்பத்தினர், கேரளாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். இஸ்ரோ தலைவராக கஸ்தூரிரங்கன் இருந்தபோது பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவுகணைகளை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனைகளை படைத்தது.
மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார். புதிய கல்விக்கொள்கை வரைவுக்குழுவின் தலைவராகவும் கஸ்தூரிரங்கன் இருந்துள்ளார்.