மேட்டுப்பாளையம்: கோவை சிறுமுகை அருகே உடல் நலம் பாதித்த காட்டு யானை, 7 நாள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது சிறுமுகை. இங்குள்ள கூத்தாமண்டி பிரிவு பகுதியில் 7 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதித்த நிலையில் காட்டுயானை ஒன்று நின்றது. வனச்சரகர் மனோஜ், கோவை மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் ஆகியோர் அறிவுறுதல்பேரில் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
7 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று (செவ்வாய்) காலை காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் உள்உறுப்பு பாதிப்பு குறித்து தெரிய வரும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.