Monday, September 25, 2023
Home » ஆவடி அருகே சோகம் பைக் மோதி பூ வியாபாரி பலி

ஆவடி அருகே சோகம் பைக் மோதி பூ வியாபாரி பலி

by Ranjith

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், திலகர் தெருவைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி(43). இவர் இந்து கல்லூரி எதிரில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 10.45 மணி அளவில், வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், ரிலையன்ஸ் ஸ்டார் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த பைக் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், செண்பகவள்ளி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, செண்பகவள்ளி உறவினர்கள் போலீசாரிடம் இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்றவரை கைது செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, போலீசார் அவர்களுடன் நடத்திய சமரச போச்சுவார்த்தைக்கு பிறகு இறந்த செண்பகவள்ளியின் உடலை மீட்டு போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்றவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?