சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் மீனா (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி, 2 மகள்கள் உள்ளனர். இதில், 10 வயதுடைய 2வது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, கடந்த 15ம் தேதி, பக்கத்து வீட்டில் விளையாட சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டில் இருந்த மீன் வியாபாரி நல்லமுத்து (49) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன், என மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சிறுமி தனது தாய் மீனாவிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மீனா மற்றும் அவரது உறவினர்கள் நல்லமுத்து வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், முகத்தில் பலத்த காயமடைந்த நல்லமுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனா புகார் அளித்தார். போக்சோ வழக்கில் நல்லமுத்துவை கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை மீன் வியாபாரி கைது
0
previous post